Kathir News
Begin typing your search above and press return to search.

உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை!

உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை!

ThangaveluBy : Thangavelu

  |  13 March 2022 9:36 AM GMT

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. சுமார் 18வது நாளாக தாக்குதல் நடத்தி வருவதால் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் உக்ரைனில் தவித்து வந்த இந்தியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு வந்தது. இதற்காக இந்திய விமானப்படை விமானம் ஈடுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் உக்ரைனுக்கு நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கு பெற்றுள்ளனர். அதே சமயம் இந்திய நாட்டின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

Source: Daily Thanthi

Image Courtesy: Manorama

Next Story
கதிர் தொகுப்பு
Trending News