Kathir News
Begin typing your search above and press return to search.

போலீசை பார்த்து பயப்பட மாட்டேன் என்ற காங்கிரஸ் தலைவர், தலைதெறிக்க ஓடிய காட்சி!

போலீசை பார்த்து பயப்பட மாட்டேன் என்ற காங்கிரஸ் தலைவர், தலைதெறிக்க ஓடிய காட்சி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jun 2022 10:29 AM IST

நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நேரடியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்கை அமலாக்க இயக்குனரகம் தற்போது விசாரித்து வருகிறது.

ராகுல் காந்தி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது காங்கிரஸ் அரசியல்வாதியும், இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ஸ்ரீனிவாஸ் பி.வி , டெல்லியில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகங்களுக்கு வெளியே காங்கிரஸ் ஆதரவாளர்களால் ஏற்பட்ட சலசலப்பின் போது போலீஸ் கைது செய்வதைத் தவிர்க்க ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதை போல ஓடினார்.

முதலில் செய்தியாளரிடம் ஸ்ரீனிவாஸ் பேசும்போது, ​​காவல்துறையைக் கண்டு தான் பயப்படுவதில்லை என்றும், நிதி மோசடியில் சிக்கியுள்ள ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் நிச்சயமாக அணிவகுப்பு நடத்துவார்கள் என்றும் கூறினார். ஆனால் கைது செய்ய போலீஸ் அருகில் வந்ததும், ஓட்டம் பிடித்தார்.

Inputs From: Opindia




Next Story
கதிர் தொகுப்பு
Trending News