Kathir News
Begin typing your search above and press return to search.

தொடரும் அட்டூழியம்! 800 வருடம் பழமையான இந்து கோவில் மீது தாக்குதல்!

தொடரும் அட்டூழியம்! 800 வருடம் பழமையான இந்து கோவில் மீது தாக்குதல்!

தொடரும் அட்டூழியம்! 800 வருடம் பழமையான இந்து கோவில் மீது தாக்குதல்!

Saffron MomBy : Saffron Mom

  |  12 Feb 2021 6:35 AM GMT

சமீப காலமாக இந்து கோவில்கள் மீதான தாக்குதல்களும் மற்றும் அங்குள்ள சிலைகள் மீதும் தாக்குதல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. புதன்கிழமை அன்று உத்தர காண்டில் 800 வருடம் பழமையான கோவில் தாக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலானது துவாராஹத் பகுதியில் அமைந்துள்ளது.

புதன்கிழமை அன்று மரிட்யுஞ்சய் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பைரவர் கோவிலுக்கு மக்கள் வழிபடச் சென்றிருந்த போது அங்குள்ள சிவலிங்கம் தாக்கப்பட்டுத் திருடப்பட்டிருந்தது. இந்த திருட்டானது பட்ட பகலில் நடந்துள்ளது. CCTV காட்சிகள் வைத்து இந்த தாக்குதலை இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்து செய்துள்ளனர்.

இந்த கோவில் முன்னர் 18 ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரோஹில்லாஸ் தாக்குதல் நடத்தினர். அதனை அவர்கள் இராணுவத்தால் வெளியில் அனுப்பப்பட்டனர். "இந்த கோவிலில் உள்ள சிவன் சிலையில் மேல் பகுதியில் சர்வதேசச் சந்தையில் மிகப் பெரிய விலையுள்ளது," என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இந்தியத் தண்டனை சட்டம் 379 மற்றும் 427 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதம் ரீதியாக வன்முறையைத் தடுப்பதற்காகத் திருட்டு வழக்கின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த போன்ற தாக்குதல்களை நடத்தும் குற்றவாளிகளுக்கு இது போன்ற சம்பவம் சங்கடத்தை அளிக்கும் என்றும் தெரிந்தும் இதுபோன்ற தாக்குதலைச் செய்து வருகின்றனர். தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கோவில்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு உள்ளாகுகின்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News