Kathir News
Begin typing your search above and press return to search.

அனுமன் ஜெயந்தி வன்முறை வழக்கில் 25 பேர் கைது: டெல்லி போலீஸ் அதிரடி!

அனுமன் ஜெயந்தி வன்முறை  வழக்கில் 25 பேர் கைது: டெல்லி போலீஸ் அதிரடி!

ThangaveluBy : Thangavelu

  |  19 April 2022 4:13 PM GMT

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்புரி பகுதியில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரண்டு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. இந்த சம்பவத்தில் வாகனங்களுக்கு தீவைப்பு மற்றும் கல் வீசி தாக்குதல்களை நடத்தினர். இதில் பொதுமக்கள் உட்பட போலீசார் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அதன்படி நேற்று மேலும் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் இதுவரைக்கும் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் கைது செய்யப்பட்ட ஒருவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியளிக்கிறது. அதாவது அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது வீசுவதற்கு என்று கலவரக்காரர்களுக்கு கண்ணாடி பாட்டில்களை வழங்கினார் என்பதை ஒப்புக்கொண்டார். மற்றொருவர் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது சூடு நடத்தியவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Source: Maalaimalar

Image Courtesy: NDTV

Next Story
கதிர் தொகுப்பு
Trending News