Kathir News
Begin typing your search above and press return to search.

இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி.. உறவினர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.!

இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி.. உறவினர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.!

இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி.. உறவினர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jan 2021 3:23 PM GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சசிகலாவிற்கு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிறை தண்டனை பெற்று சசிகலாவுடன், இளவரசியும் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News