Begin typing your search above and press return to search.
ஒட்டு மொத்த குடிமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு.!
ஒட்டு மொத்த குடிமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு.!
By : Kathir Webdesk
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசியை எந்தவித தடையுமின்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பான ஒத்திகை இன்று தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், டெல்லியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகையானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிப்பெற்ற பின்னர் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story