கொரோனா 2வது அலை.. இந்தியாவில் 270 மருத்துவர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மருத்துவ சங்கம்.!
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் நாடு முழுவதும் 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.

By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் நாடு முழுவதும் 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை குவிந்து வருகிறது. அது போன்றவர்களை மருத்துவர்கள் இரவு, பகல் என்று பாராமல் தங்களது முழு மூச்சுப்பணியாக செய்து வருகின்றனர்.
அது போன்ற சமயங்களில் பல மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்கு உட்பட்டு உயிரிழந்துள்ளனர். இதுவரை 2ம் அலையில் 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையில் சுமார் 748 மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் காலங்களில் பொதுமக்கள் அரசு சொல்வதை கேட்டு ஊரடங்கு சமயங்களில் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தால், நோய் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க முடியும்.
