கொரோனா வைரஸ் 3வது அலையை சமாளிக்க தயாராக வேண்டும்: மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர்.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
By : Thangavelu
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 06 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்தது.
தற்போதைய சூழலில் 34.87 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,26,188 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போன்று கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,38,439ஆக உயர்ந்துள்ளது. மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் கொரோனா தொற்று குறித்து கூறியதாவது: கொரோனா தொற்றின் 3வது அலை தவிர்க்க முடியாதது. ஆனால் இந்த அலை எப்போது நிகழும் என கூறமுடியாது. ஆனால் இதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.