Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா 2வது அலை.. இந்தியாவில் 594 டாக்டர்கள் உயிரிழப்பு.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலை.. இந்தியாவில் 594 டாக்டர்கள் உயிரிழப்பு.!

ThangaveluBy : Thangavelu

  |  2 Jun 2021 6:06 AM GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.





இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் பல லட்சங்களாக உயர்ந்துள்ளது. இதனிடையே நோயாளிகளை குணப்படுத்தும் மருத்துவர்களும் இந்நோய்க்கு ஆளாகியுள்ளது வேதனை அளிக்கிறது. இந்தியாவில் முதல் அலை பரவலின்போது 736 மருத்துவர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.





இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள 2வது அலையால் நாடு முழுவதும் இதுவரை 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக டெல்லியில் 107 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் 67 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 21 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News