கெஜ்ரிவால் 'வீட்டுக் காவலில்' இல்லை - ஆம் ஆத்மி கூற்றை மறுத்த டெல்லி காவல்துறை.!
கெஜ்ரிவால் 'வீட்டுக் காவலில்' இல்லை - ஆம் ஆத்மி கூற்றை மறுத்த டெல்லி காவல்துறை.!
By : Saffron Mom
ஆம் ஆத்மி கட்சியினருக்கும் பிற கட்சி உறுப்பினர்கள் இடையே மோதல்களைத் தவிர்ப்பதற்கு முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு அதிகப்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டெல்லி முதலமைச்சர் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்று டெல்லி காவல்துறை DCP அன்டோ அல்போன்ஸ் கூறினார்.
It is a general deployment to avoid any clash between AAP and any other party. CM has not been put under house arrest: Anto Alphonse, DCP North, Delhi https://t.co/pc4WJAxZek
— ANI (@ANI) December 8, 2020
கெஜ்ரிவால் டெல்லி காவல்துறையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இன்று முன்னர் ஆம் ஆத்மி கட்சியினர் ட்விட் செய்திருந்தனர். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஸுரபா பரத்வாஜ், டெல்லி முதலமைச்சர் சிங்கு எல்லையில் விவசாயிகளைச் சந்தித்து மற்றும் பாரத் பந்திற்கு ஆதரவு அளித்துவந்த பின்னர், அவரது வீட்டைச் சுற்றி டெல்லி காவல்துறை தடுப்புகள் அமைத்து வீட்டுக் காவல் போல் நிலைமை ஏற்படுத்தி உள்ளதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
Important :
— AAP (@AamAadmiParty) December 8, 2020
BJP's Delhi Police has put Hon'ble CM Shri @ArvindKejriwal under house arrest ever since he visited farmers at Singhu Border yesterday
No one has been permitted to leave or enter his residence#आज_भारत_बंद_है#BJPHouseArrestsKejriwal
No one is allowed to go inside, he is not allowed to come out. MLAs, who had a meeting with CM yesterday, were beaten up by Police when they went to meet him. Workers were not allowed to meet him either. BJP leaders are being made to sit outside his residence: Saurabh Bharadwaj https://t.co/uuz6HrR6xd
— ANI (@ANI) December 8, 2020
நேற்று அவர் திரும்பிய பின்னர் கெஜ்ரிவாலைச் சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இருப்பினும் தற்போது டெல்லி காவல்துறை அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
This claim of CM Delhi being put on house arrest is incorrect. He exercises his right to free movement within the law of the land. A picture of the house entrance says it all.@DelhiPolice @LtGovDelhi pic.twitter.com/NCWBB9phDS
— DCP North Delhi (@DcpNorthDelhi) December 8, 2020
வடக்கு டெல்லி DCP பதிவிட்ட ட்விட்டில், அவர் டெல்லி முதலமைச்சர் வீட்டிற்கு வெளியே உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டார். அதில் நிலத்தின் சட்டத்திற்குள் இயங்குவதற்கான உரிமை உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் கெஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டுவது முற்றிலும் தவறானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.