Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி வன்முறை: கைதானவர்கள் 115 பேர்.. முதலமைச்சர் அறிவிப்பு.!

டெல்லி வன்முறை: கைதானவர்கள் 115 பேர்.. முதலமைச்சர் அறிவிப்பு.!

டெல்லி வன்முறை: கைதானவர்கள் 115 பேர்.. முதலமைச்சர் அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Feb 2021 6:45 PM GMT

டெல்லியில் கடந்த 26ம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் மிகப்பெரிய வன்முறை நிகழ்ந்தது. இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்திற்கு பின்னர் சில விவசாய சங்கத்தின் தலைவர்கள் புகார் தெரிவித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பலரை காணவில்லை என கூறினர்.

இந்நிலையில், குடியரசுத் தினத்தன்று நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் 115 நபர்களின் பெயர் பட்டியலை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார். இவர்கள் அனைவரும் டிராக்டர் பேரணியின் போது கலவரத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

குடியரசுத் தினத்தன்று நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின்போது, எதிர்பாராத விதமாக சில இடங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, விவசாயிகள் 115 பேரை கைது செய்த டெல்லி போலீசார், அவர்களை சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News