Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த ஆண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெடி வெடிக்க நிபந்தனைகள் விதித்தது!

அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகளை தவிர்க்க கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்.

இந்த ஆண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெடி வெடிக்க நிபந்தனைகள் விதித்தது!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Oct 2022 2:10 AM GMT

தீபாவளி பண்டிகைகளை பட்டாசு விபத்து இல்லாமலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும் கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் தற்போது மாசு கட்டுப்பாட்ட வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது தீபாவளி பண்டிகையின் போது அதிக அளவில் மக்கள் பட்டாசு வெடிப்பார்கள். இதன் பெயரில் சுற்றுச்சூழலுக்கு பெரும் அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக மாசு கட்டுப்பாட்டு பார்க்கும் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி குறைந்த ஒளியுடன், அதாவது சத்தத்துடன் கூடிய குறைந்த அளவில் காட்டும் மாசுபடுக்கும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வடிக்க வேண்டும்.


திறந்தவெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கு அந்தந்த பகுதியில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிகள் வேண்டும். அதிக ஒளி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிப்புகளை தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்திரிகளில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அனுமதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.


குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்கள் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு அதிக மாசை ஏற்படுத்த பட்டாசுகளை அரசு அனுமதி அளித்துள்ள உரிய நேரத்தில் மட்டுமே கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டும். இவ்வாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு இருக்கிற அறிக்கையின் கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News