Kathir News
Begin typing your search above and press return to search.

குளிருக்கு மது அருந்த வேண்டாம்.. வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள்.!

குளிருக்கு மது அருந்த வேண்டாம்.. வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள்.!

குளிருக்கு மது அருந்த வேண்டாம்.. வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Dec 2020 11:46 AM GMT

தற்போதையை சூழலில் வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அனைத்து பகுதிகளும் பனிப்போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்து வருகிறது.

அதிகாலையில் சாலைகள் முழுவதும் பனிமூட்டமாக காணப்படுவதால் வாகன போக்குவரத்து முற்றிலும் குறைந்துள்ளது. காலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ளனர். குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தீமூட்டி குளிர்காய்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது. குளிர் தெரியாமல் இருக்க, மது பிரியர்கள் சிலர் மது அருந்துவதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், வட மாநிலங்களில் வரும் நாட்களில் குளிர் மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியிருப்பதாவது: டிசம்பர் 29 முதல் பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் குளிர் மேலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.வீடுகளிலேயே இருங்கள். வைட்டமின் -சி நிறைந்த பழம் வகைகளை சாப்பிடுங்கள். கடுமையான குளிர்ச்சியின் விளைவுகளை எதிர்கொள்வதற்கு உங்கள் சருமத்தை தொடர்ந்து ஈரப்பதமாக வைத்திருப்பது அவசியம்.

ஆல்கஹால் உடல் வெப்பத்தை மேலும் வெகுவாக குறைத்துவிடும் என்பதால் மது அருந்துவதை நிறுத்துங்கள். வீடுகளிலோ அல்லது புத்தாண்டு கொண்டாட்டங்களிலோ மது அருந்துவது உடல்நலத்திற்கு நல்லதல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News