PMC வங்கி மோசடி வழக்கில் சஞ்சய் ரவுத் மனைவிக்கு ED சம்மன்!
PMC வங்கி மோசடி வழக்கில் சஞ்சய் ரவுத் மனைவிக்கு ED சம்மன்!
By : Saffron Mom
PMC வங்கி பணமோசடி வழக்கில் சிவ சேனா கட்சித் தலைவரான சன்ஜய் ரவுத்தின் மனைவி வர்ஷா ரவுத்க்கு டிசம்பர் 29 இல் வரவழைக்கக் கோரி அமலாக்க இயக்கரகம் சம்மன் அளித்துள்ளது.
அறிக்கையின் படி, வர்ஷா ரவுத்க்கு மற்றொரு குற்றவாளியான பிரவின் ரவுத் மனைவிக்கு 50 லட்சம் பணப் பரிவர்த்தனை செய்தற்காகச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது அவர் சொத்து வாங்க வாங்கிய கடனாகப் பெற்றது என்றும் அது கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைவர் கிரிட் சோமையா, அவர்களது குடும்பத்தினர் சார்பில் நிதி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா என்பது குறித்து சஞ்சய் ரவுத் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
#ED summons #SanjaRaut's wife, Varsha in connection with #PMC Bank Scam on December 29.
— TOI Mumbai (@TOIMumbai) December 27, 2020
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு(PMC) வங்கியானது பண மோசடி மற்றும் தவறான கடன் வழங்கியதற்காக ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்குக் கீழ் உள்ளது. பின்னர் இந்த நெருக்கடிகளுக்கு HDIL வங்கிக் கணக்கே காரணம் என்று வங்கி ஒப்புக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து, HDIL இயக்குநர் சாரங் வாதவன் மற்றும் ராகேஷ் குமாரை 4,355கோடி பண மோசடிக்காக மும்பை காவல்துறை கைது செய்தது. அக்டோபர் 4 இல் PMC வங்கியின் முன்னாள் MP ஜாய் தாமஸை அமலாக்கத் துறை கைது செய்தது. PMC வங்கி மோசடி வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத் துறை PMC வங்கி மற்றும் HDIL மீது செப்டம்பர் 30 இல் FIR பதிவு செய்தது.
பின்னர், முன்னாள் MP ஜாய் தாமஸ் 2012 இல் தனது உதவியாளரை மனது இஸ்லாமிற்கு மாறினது பெயரை ஜுனைத் கான் என்று மாற்றிக்கொண்டது தெரியவந்தது. அதன் பின்னர் புனைவில் 10 சொத்துக்களை வாங்கி தன் மனைவியுடன் 4,355 கோடி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை அமலாக்கத் துறை நடத்தி வருகின்றது.