Kathir News
Begin typing your search above and press return to search.

5 மாநிலங்களில் எத்தனை கட்ட தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ், ஒமைக்ரான் வைரஸ் வேகமாக நாடு முழுவதும் பரவி வருகிறது.

5 மாநிலங்களில் எத்தனை கட்ட தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

ThangaveluBy : Thangavelu

  |  9 Jan 2022 2:40 AM GMT

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ், ஒமைக்ரான் வைரஸ் வேகமாக நாடு முழுவதும் பரவி வருகிறது.


இதனால் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை வல்லுநர்களிடம் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த சில நாட்கள் முன்னர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தடுப்பூசி பயன்பாட்டை வேகப்படுத்தவும் கேட்டுக்கொண்டனர்.


இந்நிலையில், 5 மாநில தேர்தல் குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் 690 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இவை அனைத்திற்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.


கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றால் தேர்தலை நடத்துவதற்கு சற்று சவாலாக உள்ளது. இதனால் வாக்காளர்களையும், கட்சியினரை காப்பாற்றுகின்ற வகையில் தேர்தலை நடத்த வேண்டும். அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.


5 மாநிலங்களில் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் அளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதனால் 5 மாநிலங்களிலும் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது என்றார். அதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படும். மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News