Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகள் டிராக்டர் பேரணி! கைவிரித்த உச்ச நீதிமன்றம்!

விவசாயிகள் டிராக்டர் பேரணி! கைவிரித்த உச்ச நீதிமன்றம்!

விவசாயிகள் டிராக்டர் பேரணி! கைவிரித்த உச்ச நீதிமன்றம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Jan 2021 4:50 PM GMT

இந்திய குடியரசு தினவிழாவில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனதாக்கல் செய்தது.

இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்குவது டெல்லி போலீஸ்தான். இது பற்றி நாங்கள் முன்னரே கூறிவிட்டோம். இதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே உங்கள் மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனால் உச்சகட்ட குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குடியரசுத்தினவிழாவில் விவசாயிகளை எப்படி சமாளிப்பது என்று டெல்லி காவல்துறை திண்டாடி வருகிறது.

ஒரு வேளை அணிவகுப்பில் அனுமதிக்கவில்லை என்றால், அவர்கள் போராட்டத்தை வேறு விதமாக மாற்றுவதற்கும் வாய்ப்பிருப்பதாக போலீசார் கருதுகின்றனர். இதனால் விவசாய பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தவும் காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News