Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து அதிகரிப்பு : கொரோனா சிக்கலை தாண்டி தேடி வரும் நிறுவனங்கள்..!

FDI Inflows grow 62% during first four months of current Financial Year over corresponding period last year

மத்திய அரசின் நடவடிக்கைகளால் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து அதிகரிப்பு : கொரோனா சிக்கலை தாண்டி தேடி வரும் நிறுவனங்கள்..!

MuruganandhamBy : Muruganandham

  |  23 Sep 2021 3:41 AM GMT

அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை சீர்திருத்தங்கள், முதலீட்டு வசதிகள், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வது உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளால் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து அதிகரித்துள்ளது.

2021-22 நிதியாண்டின் முதல் நான்கு மாதத்தில் 27.37 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈட்டியுள்ளது. இது கடந்த 2020-21 நிதி ஆண்டின் இதே காலத்தை விட 62% அதிகமாகும்.

2021-22-ஆம் நிதி ஆண்டின் முதல் 4 மாதத்தின் அந்நிய நேரடி பங்கு முதலீடான 20.42 பில்லியன் அமெரிக்க டாலர், அதற்கு முந்தைய ஆண்டை விட 112% உயர்வாகும்.

2021-22-ஆம் நிதி ஆண்டின் முதல் 4 மாதத்தின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி பங்கு முதலீட்டில் வாகன தொழில்துறை 23% உடன் முன்னணி துறையாக விளங்குகிறது. அதைத் தொடர்ந்து, கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை (18%), சேவைகள் துறைகளில் (10%) அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாகன தொழில்துறையில் அதிகபட்ச அந்நிய நேரடி பங்கு முதலீடு கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. 2021-22-ஆம் நிதி ஆண்டில் (ஜூலை 2021 வரை) ஒட்டுமொத்த அந்நிய நேரடி பங்கு முதலீட்டில் கர்நாடகா அதிகபட்சமாக 45%, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 23%, தில்லி 12% பங்குகளைப பெற்றுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News