Kathir News
Begin typing your search above and press return to search.

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல்: இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது!

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல்: இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது!

ThangaveluBy : Thangavelu

  |  7 March 2022 3:03 AM GMT

இந்தியாவிலேயே மிகப்பெரிய சட்டசபை அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் 403 தொகுதிகள் உள்ளது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் இன்று 7வது கட்டத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கியுள்ளது. 58 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இதில் பிரதான கட்சியான பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என்று 613 பேர் போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News