Kathir News
Begin typing your search above and press return to search.

கங்கை நதி தூய்மை பணி.. களத்தில் இறங்கும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள்!

கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர்.

கங்கை நதி தூய்மை பணி.. களத்தில் இறங்கும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள்!
X

ThangaveluBy : Thangavelu

  |  5 Sept 2021 5:37 AM

கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர்.

இந்த அமைப்பின் கூட்டம் டெல்லியில் இன்று காலை நடக்க உள்ளது. நமது நாட்டை காக்கின்ற பணியில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் கோபால் ஷர்மா 79, ஹெம் லோகுமி 70, மனோஜ் கேஷ்வர் 53 ஆகியோர் ஆறுகளை காப்பதற்காக தற்போது களம் இறங்கியுள்ளனர்.

இதற்கு என்று ஹரியானா மாநிலம் குர்கானில் 'அதுல்ய கங்கா' என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பு ஹரித்துவாரில் இருந்து கோமுகி வரையிலும் கங்கை ஆற்றை சுத்தம் செய்கின்ற பணியில் 11 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது.

இதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வல இளைஞர்கள் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2838012

Next Story
கதிர் தொகுப்பு
Trending News