Begin typing your search above and press return to search.
கொரோனா தடுப்பூசி நிறுவனத்திற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு.!
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராகவும் இருப்பதால் அங்கு சென்றுள்ளார்.

By : Thangavelu
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராகவும் இருப்பதால் அங்கு சென்றுள்ளார்.
தெலங்கானா ராஜ்பவனில் காணொலி வாயிலாக நடந்த நிகழ்வில், ஸ்புட்னிக் நிறுவனம் மற்றும் 2 டி.ஜி. மருந்தை தயாரிக்கும் நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனங்களுடன் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துரையாடினார்.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி தற்போது தெலங்கானா மாநிலத்தில் 3 இடங்களில் தயாரிக்கப்படுகிறது. அதே போன்று தடுப்பூசி உற்பத்தி செய்யும் மையங்களை புதுச்சேரியில் ஆரம்பித்தால், வேலைவாய்ப்பும் மற்றும் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைளில் அதிகமான பயன் தரும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.
Next Story
