Kathir News
Begin typing your search above and press return to search.

முகேஷ் மகாவீர் என்று பொய் சொல்லி இந்து பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த முகமது அக்தர் ஷேக் - மதம்மாறச் சொல்லி அரங்கேறும் கொடுமை..!

When the girl found the Aadhar card of her husband 3 years after marriage, she realised that he was 'Mohammed Akhtar Sheikh,' not 'Mukesh Gupta'

முகேஷ் மகாவீர் என்று பொய் சொல்லி இந்து பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த முகமது அக்தர் ஷேக் - மதம்மாறச் சொல்லி அரங்கேறும் கொடுமை..!

Accused Mohammed Akhtar Sheikh with the victim (Photo Credits: ABP News)

MuruganandhamBy : Muruganandham

  |  14 Aug 2021 5:46 AM GMT

லவ்-ஜிஹாத்தை பரப்பும் நோக்கில் 50 வயது முஸ்லீம் நபர், இளம் இந்து பெண்ணை ஏமாற்றி காதலித்து இஸ்லாத்திற்கு மாற்ற முயன்ற சம்பவம் குஜராத் மாநிலம் சூரத்தில் அரங்கேறியுள்ளது.

அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் முகமது அக்தர் ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 22 வயது இந்து பெண், 2018 ல் திண்டோலியில் உள்ள செல்போன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். ஒரு நாள் கடைக்கு வந்த அக்தர், தன்னை முகேஷ் மகாவீர் குப்தா (ஒரு பொதுவான இந்து பெயர்) என ஏமாற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார். கடைக்கு புதிய வாடிக்கையாளர்களை அழைத்து வருமாறு அந்த பெண் அக்தரிடம் கேட்டிருந்தார். அக்தர் அதற்கு இணங்கி 10-15 வாடிக்கையாளர்களை அழைத்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்துள்ளது.

50 வயதான அக்தர் பொய் சொல்லி இளம்பெண்ணை காதல் வலையில் சிக்கவைத்துள்ளார். தனக்கு திருமணமாகவில்லை என்று கூறியதோடு மட்டுமல்லாது, இந்திய ரயில்வேயில் ஊழியர் என்று ஏமாற்றியுள்ளார். ஒரு வருடம் கழித்து 2019ல் இருவரும் இந்து பாரம்பரியத்தின் படி திருமணம் செய்து கொண்டனர். சூரத்தின் கடோதரா பகுதியில் அமைந்துள்ள அனுமன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

திருமணமான சில மாதங்களில் அக்தர் இந்து என்று பொய்யாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டது அப்பெண்ணுக்கு தெரிய வந்தது. பிறகு அப்பெண் நமாஸ் படிக்க கட்டாயப்படுத்தப்பட்டார். இஸ்லாம் மட்டுமே உண்மையான மதம் எனவும், இஸ்லாத்திற்கு மாறி புர்கா (முக்காடு) அணியும்படி கட்டாயப்படுத்தினார். அவள் இணங்க மறுத்தபோது, அக்தர் அவளை உடல் ரீதியாக தாக்கத் தொடங்கினார். அவர் தனது உண்மையான அடையாளத்தை உலகுக்கு வெளிப்படுத்தினால் அவரது மகனை அழைத்துச் செல்வதாகவும் அவர் மிரட்டியுள்ளார். தற்போது இந்த விவகாரம் காவல் நிலையம் வரை வந்து, அக்தர் மீது கட்டாய மதமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News