இந்து சமூகத்தின் உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்திய ரபீக் மன்சூர்!
By : Kathir Webdesk
குஜராத்தில் இந்து சமூகத்தின் உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தியதற்காக ரபீக் மன்சூர் என்ற நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் ஆட்சேபகரமான வகையில் வாட்ஸ்அப் பதிவை பதிவேற்றியுள்ளார். அவர் இந்து மதத்தைப் பற்றி அவமதிக்கும் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்து தெய்வம் குறித்தும் கேவலமான கருத்துகளை தெரிவித்தார்.
சூரத்தின் மாண்ட்வி தாலுகாவில் உள்ள தட்கேஷ்வர் கிராமத்தில் வசிப்பவர் மன்சூர். அவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய கியன்வாபி மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இந்த சம்பவம் நடந்துள்ளது.
மன்சூர் இந்து விரோதப் பதிவுகளை மட்டுமே தொடர்ச்சியாக வெளியிட்டு வந்துள்ளார். இதே போல கிஷன் பர்வாத், என்பவர் முகமது நபியின் காட்சி சித்தரிப்பு கொண்ட சமூக ஊடகப் பதிவைப் பகிர்ந்ததற்காக, பைக்கில் வந்த இரு ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கிஷன் பர்வாத் கொலையைத் தொடர்ந்து , இந்தியா முழுவதும் குறைந்தது 6 மதகுருமார்கள் கைது செய்யப்பட்டனர். இந்துக்கள் மற்ற மதங்களை நிந்தித்த குற்றச்சாட்டில் தங்கள் உயிரைக் கொடுக்கும்போது, இஸ்லாமியர்களும் அவர்களின் அனுதாபிகளும் தவறு செய்த போதிலும் தங்கள் செயல்களில் இருந்து தப்பிக்க சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.
Inputs From: Opindia