சிக்கன் சாண்ட்விச் சாப்பிடவே காங்கிரஸ் செயல்படுகிறது - மனம் வெறுத்து ஹர்திக் படேல் அனுப்பிய ராஜினாமா
By : Kathir Webdesk
குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியில் படிதார் குழுவின் தலைவர் ஹர்திக் படேல் கட்சியிலிருந்து, தான் விலகிவிட்டதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், குஜராத்தில் உள்ள காங்கிரஸின் பெரிய தலைவர்கள் மாநிலப் பிரச்னைகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றனர். ஆனால், டெல்லியிலிருந்து வந்திருக்கும் தலைவர்களுக்கான சிக்கன் சாண்ட்விச் சரியான நேரத்தில் டெலிவரி செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
காங்கிரஸைச் சரியான திசையில் வழிநடத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அந்தக் கட்சி தொடர்ந்து சமூக நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறது.
கட்சியின் மூத்த தலைமைக்கு தீவிரத்தன்மை இல்லை. நான் மூத்த தலைமையைச் சந்திக்கும்போதெல்லாம், குஜராத் மக்கள் தொடர்பான பிரச்னைகளைப் பற்றிக் கேட்பதில் அவர்கள் உண்மையில் ஆர்வம் காட்டவில்லை என்று நான் உணர்ந்துகொண்டேன்.
எனவே, அந்தக் கட்சியிலிருந்து விலகும் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, நான் உண்மையிலேயே எங்கள் மாநில மக்களுக்குச் சாதகமாகப் பணியாற்ற முடியும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.