Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை வீசத்தொடங்கியுள்ளது. இதனால் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்கள் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.!

ThangaveluBy : Thangavelu

  |  17 April 2021 7:30 AM GMT

கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான குமாரசாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை வீசத்தொடங்கியுள்ளது. இதனால் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்கள் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.




இந்நிலையில், இது பற்றி அவர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது 2 முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News