Kathir News
Begin typing your search above and press return to search.

மகாராஷ்டிராவில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. 164 பேர் பலி.. 100 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. 164 பேர் பலி.. 100 பேர் மாயம்.!

ThangaveluBy : Thangavelu

  |  27 July 2021 3:03 AM GMT

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என்று மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.


இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி சுமார் 164 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 100 பேருக்கும் மேல் காணாமல் போயுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. மீட்பு பணிகளில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 29 ஆயிரம் பேர் அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News