Kathir News
Begin typing your search above and press return to search.

மும்பையில் கொடூர கொலை சம்பவத்தில் இருந்து தப்பிய இந்து குடும்பம்!

மும்பையில் கொடூர கொலை சம்பவத்தில் இருந்து தப்பிய இந்து குடும்பம்!

மும்பையில் கொடூர கொலை சம்பவத்தில் இருந்து தப்பிய இந்து குடும்பம்!
X

Saffron MomBy : Saffron Mom

  |  25 Feb 2021 4:49 PM IST

டெல்லியில் ரிங்கு சர்மாவின் கொடூர கொலை போன்றே மற்றொரு ஆபத்தில் இருந்து தப்பியது மும்பையில் முஸ்லீம்களின் ஆதிக்கம் அதிகமுள்ள மால்வாணி பகுதியில் உள்ள இந்து குடும்பம். செவ்வாய்க்கிழமை அன்று அந்த குடும்பத்தினரைக் கொடூரமாகக் கொலை செய்யும் முயற்சியில் நுழைய முயன்றுள்ளது 15-20 பேர் கொண்ட முஸ்லீம் கும்பல்.

இருப்பினும் அந்த கும்பலால் அந்த வீட்டிற்குள் செல்ல முடியவில்லை மற்றும் அந்த இளைஞரின் குடும்பம் ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பியுள்ளது. இந்த சம்பவமானது, மால்வாணி பகுதியில் முஸ்லீம்களின் துன்புறுத்தல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக நடந்துள்ளது. வழிப்போக்கர்களுக்கு எதிராகத் தவறான கருத்துக்களை ஒரு முஸ்லீம் கும்பல் முன்வைத்து வந்துள்ளது, இதுபோன்ற நடவடிக்கையைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டதாகப் பாதிக்கப்பட்ட இந்து இளைஞர் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து அந்த கும்பல் மோசமான விளைவுகளை சந்திக்கப்போவதாக எச்சரித்துள்ளது. மேலும் அந்த இளைஞரின் வீட்டுக்கு வெளியே 15-20 நபர்களுடன் ஒன்றுகூடி உள்ளே நுழைய முயன்றுள்ளது.

உள்ளூர் வாசிகள் தலையீட்டைத் தொடர்ந்து இந்த சம்பவம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட நபர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகாரளிக்கச் சென்ற காவல்துறையினர் அதனை ஏற்க மறுத்துள்ளனர். மேலும் இது இரு நண்பர்களுக்கு இடையேயான சிறிய பிரச்சனை என்றும் கூறியுள்ளது.
காவல்துறை FIR ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் மற்றும் இந்து அமைப்பின் உறுப்பினர் மும்பையில் பா.ஜ.க தலைவர் மங்கள் பிரபாத் லோதாவிடம் தனக்கு நடந்த கொடுமை குறித்துத் தெரிவித்தனர். லோதாவின் உத்தரவுக்குப் பிறகு காவல்துறை மிரட்டல் விட்ட கும்பல் மீது NC பதிவு செய்தது.

மால்வாணி பகுதியில் நடந்த சம்பவம் குறித்து டிவிட்டரில் லோதா கருத்து தெரிவித்தார். வீட்டிற்குள் நுழையும் அந்த முயற்சி குறித்து கண்டனங்களைத் தெரிவித்து மற்றும் இந்த வழக்கு தொடர்பாகச் சிறப்பு விசாரணையைத் தொடங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த பகுதியில் இந்து சமூகத்தினருக்கு ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் முயற்சி குறித்து பயனடைந்துள்ள பாதிக்கப்பட்டவரின் தாயார் அவர்களது சொந்த கிராமத்துக்கே செல்ல முடிவெடுத்துள்ளார். மேலும் இதுபோன்று அந்த பகுதியில் இந்துக்கள் மீதான தொடர் தாக்குதலானது, அவர்களை அந்த இடத்தை விட்டு அகற்றி அந்த நிலத்தை ஆக்கிரமிக்கும் ஒரு பெரிய முயற்சி என்று இந்து சமூகங்கள் தெரிவிக்கின்றனர்.

இதே போன்றே பிப்ரவரி 10 இல் டெல்லியில் முஸ்லீம் ஆதிக்கம் நிறைந்துள்ள பகுதியில் ரிங்கு சர்மா என்னும் இளைஞரைக் கொடூரமாகக் கொலை செய்தது. இந்த சம்பவமானது இருவருக்கும் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் நிதி திரட்டுவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நடந்துள்ளது. பின்னர் அந்த முஸ்லீம் கும்பல் ரிங்கு சர்மாவை வீடு தேடிச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்தது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News