இந்து சிறுமி மாயம்! உத்திரபிரதேசத்தில் புதிய மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின் கீழ் எட்டு பேர் மீது வழக்கு பதிவு!
இந்து சிறுமி மாயம்! உத்திரபிரதேசத்தில் புதிய மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின் கீழ் எட்டு பேர் மீது வழக்கு பதிவு!
![இந்து சிறுமி மாயம்! உத்திரபிரதேசத்தில் புதிய மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின் கீழ் எட்டு பேர் மீது வழக்கு பதிவு! இந்து சிறுமி மாயம்! உத்திரபிரதேசத்தில் புதிய மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின் கீழ் எட்டு பேர் மீது வழக்கு பதிவு!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/7cad936f6b6acd93ec6e40ee261d0b4a.jpeg)
உத்தரபிரதேச மாநிலத்தில் சீதாபூர் மாவட்டத்தில் ஒரு இந்து சிறுமியை தனது வீட்டில் இருந்து கடத்தியதாக, புதிய மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின் கீழ் 7 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளி ஒருவருர் அடங்குவார். தலைமறைவாக இருந்த அவரது சகோதரர் மற்றும் மைத்துனர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நவம்பர் 24 ஆம் தேதி நடந்தது. இது தொடர்பாக நவம்பர் 27 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் (சீதாப்பூர்) ராஜீவ் தீட்சித் கூறுகையில், "புதிய மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின் கீழ் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏழு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். விசாரணை நடந்து வருகிறது, காவல்துறையினரின் கவனக்குறைவு ஏதேனும் காணப்பட்டால், அது கண்டிப்பாக தீர்க்கப்படும், என்றார்.
கைது செய்யப்பட்டவர்களில் குற்றவாளி ஜாப்ரேலின் சகோதரர் இஸ்ரேல் மற்றும் அவரது மைத்துனர் உஸ்மான் ஆகியோர் அடங்குவதாக போலீசார் தெரிவித்தனர்.
பலவந்தமான அல்லது மோசடியான மத மாற்றங்களுக்கு எதிராக உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் நவம்பர் 28 ம் தேதி சட்டவிரோதமாக மாற்ற எதிர்ப்பு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இந்த சட்டம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகபட்சமாக ரூ .50,000 அபராதமும் விதிக்கப்படுகிறது.