Kathir News
Begin typing your search above and press return to search.

பொதுதுறை நிறுவனங்களின் பயனற்ற சொத்துக்களை பணமாக்குவது எப்படி ? உலக வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம்.!

பொதுதுறை நிறுவனங்களின் பயனற்ற சொத்துக்களை பணமாக்குவது எப்படி ? உலக வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம்.!

பொதுதுறை நிறுவனங்களின் பயனற்ற சொத்துக்களை பணமாக்குவது எப்படி ? உலக வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம்.!
X

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  18 Nov 2020 5:39 PM IST

இந்தியாவில் மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் மூடப்பட்ட நிறுவனங்கள், நலிவடைந்த நிலையில் இயங்கி வரும் நிறுவனங்கள், நல்லநிலையில் இயங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஏராளமான அளவில் முக்கியமற்ற சொத்துக்கள், பயனற்ற சொத்துக்கள் என பல கோடிக்கணக்கு மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

என்றாலும் இவற்றை பணமாக்குவதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. இந்த நிலையில் இந்த சொத்துக்களை பணமாக்குவது குறித்த ஆலோசனை சேவைகளை பெற உலக வங்கியுடன், மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை ஒப்பந்தம் செய்துள்ளது.

பங்கு விற்பனை அல்லது மூடல் திட்டத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனங்களின் முக்கியமற்ற சொத்துக்கள் மற்றும் ரூ.100 கோடிக்கு மேற்பட்ட கோர்ட் நடவடிக்கையால் முடக்கப்பட்ட சொத்து ஆகியவற்றை முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை பணமாக்குகிறது.

முக்கியமற்ற சொத்துக்களை பணமாக்குவதற்கு முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை திட்டம் வைத்துள்ளது என்ற போதிலும் தற்போது இத்துறை, முக்கியமற்ற சொத்துக்களை பணமாக்குவது தொடர்பான சில சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் உரிய ஆலோசனைகளை பெற உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய நிதியமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த ஆலோசனை திட்டம், இந்தியாவில் பொது சொத்து பணமாக்குதலை பகுப்பாய்வு செய்கிறது. சர்வதேச மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு எதிராக அதன் நிறுவன மற்றும் வணிக மாதிரிகளை மதிப்பீடு செய்வதோடு, செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மேம்படுத்துவதற்கும், அவற்றை அமல்படுத்துவதற்கான திறனை வளர்ப்பதற்கும் துணைபுரிகிறது.

இந்த திட்டம் முக்கியமற்ற சொத்துக்களை, பணமாக்கும் செயல்முறையை எளிதாக்கும் மற்றும் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பயன்படுத்தப்படாத மற்றும் ஓரளவு பயன்படுத்தப்பட்ட சொத்துக்கள் விற்பனை மூலம் முதலீடுகள் மற்றும் வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்களை கணிசமாக அதிகரிக்க உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News