Kathir News
Begin typing your search above and press return to search.

இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்த இந்து இளைஞர் கௌரவ கொலை!

இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்த இந்து இளைஞர் கௌரவ கொலை!

ThangaveluBy : Thangavelu

  |  5 May 2022 3:21 PM GMT

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், பில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் 30, இவர் ஐதராபாத் நகரில் உள்ள ஒரு கார் கம்பெனியில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் கனா போர் பகுதியை சேர்ந்த செய்யது அஸ்ரி சுல்தானும், நாகராஜும் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம் அஸ்ரி சுல்தான் வீட்டிற்கு தெரிந்துள்ளது. இதனால் பெண்ணின் பெற்றோர் நாகராஜுடன் எச்சரிக்கை செய்துள்ளனர். எங்கள் பெண்ணிடம் தொடர்பு கொள்ளக்கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் செய்யது அஸ்ரி சுல்தான், நாகராஜுடன் செல்போன் மூலமாக அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வரவே, செய்யது அஸ்ரி சுல்தானை வீட்டில் வைத்து அடைத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அஸ்ரி சுல்தான் தப்பி நாகராஜ் இருக்கும் இடத்தில் சென்று தஞ்சமடைந்துள்ளார். அவர்கள் இருவரும் கடந்த ஜனவரியில் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து ஐதராபாத்தில் இருந்தால் தங்களது உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்று எண்ணி அஸ்ரி சுல்தானை அழைத்துக்கொண்டு விசாகப்பட்டணத்திற்கு சென்றுவிட்டார்.

இதனிடையே கடந்த 4 மாதங்களாக அஸ்ரியை தேடாமல் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர்கள் அமைதி காத்தனர். இதனால் மீண்டும் தனது மனைவியை அழைத்துக்கொண்டு நாகராஜீ ஐதராபாத்திற்கு சென்று தனது பணியில் சேர்ந்தார். அதன்படி நேற்று (மே 4) பகலில் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு டூ வீலரில் சென்ற நாகராஜீவை, அஸ்ரி சகோதரர்கள் கடப்பாரையை வைத்து தாக்கியுள்ளனர். இதில் நிலைக்குலைந்து கீழே விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். அப்போதும் விடாமல் நாகராஜீவை அடித்ததில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்தார். அப்போது அங்கு ஏராளமான பொதுமக்கள் இருந்தும் இந்த கொலையை தடுக்காமல் இருந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதம் மாறி திருமணம் செய்து கொண்டு இந்து இளைஞரை இஸ்லாமிய குடும்பம் அடித்து கொன்றுள்ள சம்பவம் தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Malaimalar

Image Courtesy:Opindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News