IIT கான்பூரின் எச்சரிக்கை மணி: இவ்வருட இறுதியில் கொரோனா 3வது அலை பரவ அதிக வாய்ப்பு!

By : Bharathi Latha
இந்தியாவில் தற்பொழுது இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பல்வேறு நிறுவனங்கள் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அந்த வகையில் தற்போது IIT கான்பூர் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபரில் ஏற்படும் என அவர்கள் நடத்திய ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
கொரோனா தொற்றின் 3வது அலை குறித்து IIT கான்பூர் பேராசிரியர் ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேந்திர வெர்மா தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர். இதுபற்றி அவர்கள் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி கூறுவது என்னவென்றால், இந்தியாவில் கொரோனா தொற்றின் 3வது அலை மக்களின் நடத்தை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமையும்.
இரண்டாம் அலை ஏற்பட்ட காலத்தில் கிடைத்திருக்கும் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்திய இந்த ஆய்வில், 3வது அலை மூன்று விதத்தில் அமையலாம் எனத் தெரியவந்துள்ளது. கொரோனா 3வது அலை செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் உச்சமடையும். ஆனால், 2வது அலையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம். செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் மீண்டும் பரவல் அதிகரித்து, 2வது அலையைக் காட்டிலும் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால், பாதிப்புக் குறைவாகவே இருக்கும். 3வது அலையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முன்னெச்சரிக்கையாக ஜூலை 15ம் தேதிக்குப் பின் முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என அந்தக் குழு தெரிவித்துள்ளது.
