Begin typing your search above and press return to search.
விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா! உயரும் பாதிப்பு எண்ணிக்கை!

By :
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் உயர்ந்து வருகிறது. சில நாட்களாகவே தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினம் பாதிப்பை விட கூடுதலாகும்.
இதன் காரணமாக நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 57 லட்சத்து 7,727 ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 46 ஆயிரத்து 569 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi
Next Story