Kathir News
Begin typing your search above and press return to search.

கடல் பாரம்பரியத்தை குறிக்கும் புதிய கடற்படைக் கொடி - பிரதமரின் கேரள பயணம்!

நாளை பிரதமர் அவர்கள் இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலை நாட்டுக்காக அர்ப்பணிக்கிறார்.

கடல் பாரம்பரியத்தை குறிக்கும் புதிய கடற்படைக் கொடி - பிரதமரின் கேரள பயணம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Sep 2022 1:28 PM GMT

இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் செப்டம்பர் 2ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. INS விக்ராந்த் இயக்கப்படுவதன் மூலம், இந்தியாவில் இரண்டு செயல்பாட்டு விமானம் தாங்கி கப்பல்கள் இருக்கும். இது நாட்டின் கடல் பாதுகாப்பை மேம்படுத்தும். கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான 'ஐஎன்எஸ் விக்ராந்த்'ஐ அறிமுகப்படுத்துகிறார்.


இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் 1-2 தேதிகளில் பிரதமர் கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது பிரதமர் அவர்கள் கேரளாவிற்கு வருகை தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. "பாதுகாப்புத் துறையில் தன்னிறைவுக்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கும் வகையில் INS விக்ராந்த் என உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்ட விமானம் தாங்கி கப்பலை பிரதமர் தொடங்குவார்.


இந்திய கடற்படையின் உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் (WDB) வடிவமைக்கப்பட்டது மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் மூலம் கட்டப்பட்டது. விக்ராந்த் நவீன தன்னியக்க அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது மற்றும் மிகப்பெரிய கப்பலாகும். இந்த நிகழ்வின் போது, ​​காலனித்துவ காலத்தை ஒழித்து இந்திய கடல் பாரம்பரியத்தை குறிக்கும் புதிய கடற்படைக் கொடியையும் மோடி வெளியிடுகிறார். கடற்படைக் கொடி என்பது கடற்படைக் கப்பல்களின் தேசியத்தைக் குறிக்கிறது.

Input & Image courtesy: Livemint

Next Story
கதிர் தொகுப்பு
Trending News