Kathir News
Begin typing your search above and press return to search.

நான்கு மாதங்களுக்குள் ஏழு பிரம்மோஸ் ஏவுகணை சோதனைகளை நடத்தி அலற விட்ட இந்தியா!

நான்கு மாதங்களுக்குள் ஏழு பிரம்மோஸ் ஏவுகணை சோதனைகளை நடத்தி அலற விட்ட இந்தியா!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 April 2022 10:58 AM IST

பிரம்மோஸ் ஏவுகணை கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரமோஸ் ஏவுகணை சர்வதேச ஆர்டர் பெற்று, ஏற்றுமதிக்கு தயராகிக்கொண்டிருக்கிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்படையுடன் $375 மில்லியன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மிக சமீபத்தில், சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை ஒரு ஆய்வின் போது அம்பாலா அருகே உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து தவறுதலாக ஏவப்பட்டு பாகிஸ்தானில் தரையிறங்கியது பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இருப்பினும், இந்த ஆண்டு பிரம்மோஸ் ஏவுகணை சோதனை ஏழு முறை நடத்தப்பட்டதை யாரும் கவனிக்கவில்லை.

ஏப்ரல் 19: ஏவுகணையின் இரண்டு வெவ்வேறு வகைகள் ஒரே நாளில் சோதிக்கப்பட்டன. இந்திய விமானப்படை தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தில் உள்ள Su-30 MKI போர் விமானத்தில் இருந்து வான்வழி ஏவப்பட்ட பிரம்மோஸை சோதனை செய்தது. மேலும் இந்திய கடற்படை அதன் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிக்கும் கப்பலான INS டெல்லியில் இருந்து ஏவுகணையை செலுத்தியது.

மார்ச் 23: பிரம்மோஸ் ஏவுகணையின் விரிவாக்கப்பட்ட வடிவமைப்பு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சோதிக்கப்பட்டது.

மார்ச் 5: இந்திய கடற்படையின் ஏவுகணை அழிப்பு கப்பலான ஐஎன்எஸ் சென்னையில் இருந்து, நீண்ட தூரம் தரையிறங்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.

பிப்ரவரி 18: இந்தியக் கடற்படையின் ஏவுகணை அழிப்புக் கப்பல் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் வங்காள விரிகுடாவில் பிரம்மோஸ் ஏவுகணையை ஏவியது .

பிப்ரவரி 2: இந்திய ஆயுதப் படை தரை அடிப்படையிலான ஏவுகணையிலிருந்து பிரம்மோஸ் ஏவுகணையைச் சோதனை செய்ததாகக் கூறியது .

ஜனவரி 20: மேம்பாடு செய்யப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை அதன் அதிகபட்ச வரம்பில் சோதனை செய்யப்பட்டது .

Input From: https://swarajyamag.com/news-brief/india-has-conducted-seven-brahmos-missile-tests-in-less-than-four-months

Next Story
கதிர் தொகுப்பு
Trending News