இந்தியா: 91 நாட்களுக்கு பின்னர் கொரோனா தொற்று 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது.!
ஒரே நாளில் 81,839 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,89,26,038 ஆக உயர்ந்துள்ளது.
![இந்தியா: 91 நாட்களுக்கு பின்னர் கொரோனா தொற்று 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது.! இந்தியா: 91 நாட்களுக்கு பின்னர் கொரோனா தொற்று 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது.!](https://kathir.news/h-upload/2021/06/22/1056134-818ulgpcoronavirus-india-september-2020-pti-650650x40005september20.webp)
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் பாதிப்புகள் அதிகமாக இருந்த நிலையில், தற்போது தொற்று பரவல் வேகமாக குறைந்துள்ளது. நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
பல்வேறு மாநிலங்கள் முழுஊரடங்கில் இருந்து தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனால் மீண்டும் இயல்பு நிலைக்கு நாடு திரும்பி வருகிறது. உயிரிழப்புகளும் வெகுவாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 2,99,77,861 ஆக உயர்ந்துள்ளது.
அதே போன்று ஒரே நாளில் 1,167 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,89,302 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 81,839 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,89,26,038 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 6,62,521 பேர் தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுவரைக்கும் 28 கோடியே 87 லட்சத்து 66 ஆயிரத்து 201 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலக நாடுகளை காட்டிலும் இந்தியாவில்தான் அதிகளவு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொற்றில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.