Begin typing your search above and press return to search.
'இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற வேண்டும்': மத்திய பட்ஜெட்டில் திட்டம்.!
'இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற வேண்டும்': மத்திய பட்ஜெட்டில் திட்டம்.!
By : Bharathi Latha
மத்திய பட்ஜெட் 2021-22’ஐ இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனாவால் பின்தங்கிய உற்பத்தித் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உற்பத்தித் துறைக்கு நிதியமைச்சர் ரூ 1.97 லட்சம் கோடி அறிவித்துள்ளார். இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற கனவை அடைய உள்கட்டமைப்பு மற்றும் நிதி மூலதன வலுப்படுத்தல் அவசியம் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இந்த முடிவை நோக்கி உற்பத்தித் துறை நிலையான இலக்கத்தில் இரட்டை இலக்கங்களில் வளர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், ஒரு மெகா முதலீட்டு ஜவுளி பூங்கா திட்டத்தை அமைப்பதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார். அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் நிறுவப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தவிர, 217 உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால் இந்தத் துறைக்கு நீண்ட கால கடன் நிதி தேவைப்படுகிறது. எனவே ரூ 20,000 கோடி ஒதுக்கீட்டில் புதிய அபிவிருத்தி நிதி நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு, உள்நாட்டு வணிகங்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் உற்பத்தி ஊக்கத் திட்டம் (PLI) திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக ஏற்பட்ட உலகளாவிய மந்தநிலையால் பொருளாதாரம் சுருங்கியது. இந்நிலையில், தற்போதைய பட்ஜெட் பொருளாதார மந்தநிலையிலிருந்து மீண்டெழுந்து, இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு திருப்பும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
Next Story