Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் பிரம்மோஸ் பரிசோதனை வெற்றி - சீனாவுக்கு எச்சரிக்கை விடும் இந்தியா.!

இந்தியாவின் பிரம்மோஸ் பரிசோதனை வெற்றி - சீனாவுக்கு எச்சரிக்கை விடும் இந்தியா.!

இந்தியாவின் பிரம்மோஸ் பரிசோதனை வெற்றி - சீனாவுக்கு எச்சரிக்கை விடும் இந்தியா.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Nov 2020 9:08 PM IST

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலிருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையின் நில தாக்குதல் பதிப்பை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன் மூலம், பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணை இப்போது அதன் இலக்கை 400 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு தாக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏவுகணையின் இலக்கு அங்குள்ள மற்றொரு தீவில் இருந்த நிலையில், துல்லியமாக இலக்கைத் தாக்கியுள்ளது.

"சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை இன்று காலை 10 மணிக்கு சோதனைக்கு ஆட்படுத்தபட்டது. அது வெற்றிகரமாக அதன் இலக்கை தாக்கியது. DRDO உருவாக்கிய ஏவுகணை இந்திய ராணுவத்தால் சோதனை செய்யப்பட்டுள்ளது. பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பு இப்போது 400 கி.மீ.க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது" என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முப்படைகளும் DRDO உருவாக்கிய பல ஏவுகணைகளை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்த வாரம் மேற்கொள்ளும் எனக் கூறப்பட்ட நிலையில், அதன் தொடக்கமாக இந்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையின் சோதனை உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை அதன் வகுப்பில் உலகின் அதிவேக செயல்பாட்டு அமைப்பாகும். சமீபத்தில் DRDO ஏவுகணை அமைப்பின் வரம்பை தற்போதுள்ள 298 கிமீ இருந்து 450 கிமீ வரை நீட்டித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை மோதல் நீடித்து வரும் நிலையில், டிஆர்டிஓ பல ஏவுகணைகளை தொடர்ச்சியாக சோதனை செய்து வரும் நிலையில், தற்போது முப்படைகளும் இந்தியாவின் பிரம்மாஸ்திரமாக உள்ளதாகக் கூறப்படும் பிரம்மோஸ் மூலம் இந்தியப் பெருங்கடலில் தனது வல்லமையை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளது, சீனாவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவே இது அமைந்துள்ளது என்று பாதுகாப்பு வல்லுனர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News