Kathir News
Begin typing your search above and press return to search.

சீனாவை கண்காணிக்க 1,000 ஹெலிகாப்டர்கள், 80 விமானங்கள் - இந்திய ராணுவம்!

சீன எல்லை பகுதிகளை கண்காணிக்க ஆயிரம் ஹெலிகாப்டர்கள் என்பது விமானங்கள் இந்திய ராணுவம் கொள்முதல் பணியை துவங்கியது.

சீனாவை கண்காணிக்க 1,000 ஹெலிகாப்டர்கள், 80 விமானங்கள் - இந்திய ராணுவம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 Oct 2022 12:51 PM GMT

சீன எல்லையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை தொகுத்த இந்தியா முயற்சி செய்து வருகின்றது. அந்த வகையில் ரிமோட் மூலம் இயங்கும் என்பது குட்டி விமானங்களையும் இந்திய ராணுவம் கொள்முதல் செய்கிறது. இந்திய சீன எல்லைக்கோடு அருகே உள்ள கிழக்கு லடாக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு பல இடங்களில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டாலும் இன்னும் சில இடங்களில் படைகள் முகாமிட்டு உள்ளன.


இதனால் பதட்டம் நீடிக்கும் நிலையில், சீன எல்லை பகுதிகளில் கண்காணிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்ட ஆயிரம் கண்காணிப்பு ஹெலிகாப்டர்களையும் ரிமோட் மூலம் இயங்கப்படும் 80 குட்டி விமானங்களையும் வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன குட்டி விமானத்தில் சென்சார் கருவிகள் உள்ளன.


அவை எதிரியின் இருப்பிடத்தை கண்டறிதல், அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளை துல்லியமாகக் கண்டறிய இரவும், பகலும் இருளான உயரமான பகுதிகளிலும் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளும். இந்த குட்டி விமானங்களை விநியோகம் செய்ய டெண்டர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 12 மாதங்களுக்குள் குட்டி விமானங்கள் அனுப்ப வேண்டியது இருக்கும். ஆயிரம் உலவு ஹெலிகாப்டர்கள் அவசரக்கால கொள்முதல் கீழ் நடைமுறையின் கீழ் கொள்முதல் செய்யப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News