Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவை குறி வைக்கும் சீன உளவு பலூன்: அமெரிக்காவை ஞாபகப்படுத்தும் செயல்!

அமெரிக்காவில் நடந்ததைப் போல தற்போது இந்தியாவை குறி வைத்து அனுப்பும் சீன உளவு பலூன்.

இந்தியாவை குறி வைக்கும் சீன உளவு பலூன்: அமெரிக்காவை ஞாபகப்படுத்தும் செயல்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Feb 2023 10:58 AM GMT

அமெரிக்காவில் உள்ள மாகாணத்தில் அணு ஆயுத தளத்திற்கு மேல் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மர்மமான பலூன் ஒன்று பறந்தது. குறிப்பாக அது சீன நாட்டின் உடையது என்று நம்பப்படுகிறது. மேலும் சீனா அனுப்பிய உளவு பலூன் என்று இந்திய அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டி இருந்தது. சீனாவும் அமெரிக்க வானில் பறந்த பலூன் எங்களுடைய தான். வானிலை ஆய்வுக்காக பறக்க விடப்பட்டது, காற்றின் வேகம் மாறி திசை மாறி அமெரிக்காவுக்கு சென்று விட்டதாக விளக்கம் அளித்து இருந்தது.


எனினும் அதை ஏற்க மறுத்த அமெரிக்கா தொடர்ந்து வீழ்த்தப்பட்ட அந்த பலூன் சிதைவுகளை ராணுவம் சேகரித்து பரிசோதனை செய்து வருகிறது. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை குறிவைத்து சீனா தன்னுடைய உளவு பலூன்களை இயக்கியிருப்பதாகவும் அமெரிக்கா தரப்பில் செய்தி வெளியாக இருந்தது. சீனாவின் தெற்கு கடற்கரையில் தைவான் மாகாணத்தில் வெளியே பல ஆண்டுகளாக இயங்கி வரும் கண்காணிப்பு பலூன் ஜப்பான், இந்தியா,வியட்நாம் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள ராணுவ சொத்துக்களை பற்றிய தகவல்களை சேகரிக்கிறது.


இந்த பலூன் என்று கூறியிருந்ததோ இந்த தகவலை பல பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் நேர்காணலில் அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்டு இருந்தது. இந்த பலூன் அனைத்தும் சீனா அரசாங்கத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. சீன ராணுவத்தின் மூலம் இந்த பலூன்கள் இயக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த வகையை செய்தல் பிற நாடுகளில் இறையாண்மையை மீறுவதாக அமைந்திருக்கிறது.

Input & Image courtesy:News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News