Kathir News
Begin typing your search above and press return to search.

உள்நாட்டு ஆயுதங்களை வைத்து போர்களில் இந்தியா வெற்றி பெறும்.. பிபின் ராவத்.!

உள்நாட்டு ஆயுதங்களை வைத்து போர்களில் இந்தியா வெற்றி பெறும்.. பிபின் ராவத்.!

உள்நாட்டு ஆயுதங்களை வைத்து போர்களில் இந்தியா வெற்றி பெறும்.. பிபின் ராவத்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Dec 2020 8:00 PM GMT

டெல்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டார்.

அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது: நாடு சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்ள ஆயுத படைகள், சுய சார்புள்ள ஒன்றாக மாறுவதற்கு டி.ஆர்.டி.ஓ. கடந்த சில ஆண்டுகளாக உதவி செய்து வருகிறது. வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் நாம் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறோம் என கூறினார்.

இதே போன்று போருக்கான திறனை அதிகரிக்கும் வகையில், முப்படைகள் அனைத்திற்கும் வேண்டிய ஆயுதங்கள் மற்றும் கருவிகளை உள்நாட்டிலேயே வழங்க நீங்கள் கடும் உழைப்பினை வழங்க வேண்டும்.

தனியார் தொழிற்சாலைகளும் இந்த துறையில் நுழைந்துள்ளன. அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு தேவையாக உள்ளது. வருங்காலங்களில் போர் ஏற்படும் சமயத்தில், உள்நாட்டு ஆயுதங்களை கொண்டே நாம் வெற்றி பெறுவோம் என்று நான் உணர்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News