Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு சில நாடுகளிடம் மட்டும் உள்ள அதிநவீன ஏவுகணை சோதனை - இந்தியா அசாத்திய வெற்றி!

உலகில் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே இருக்கும் அதில் விட ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொண்டு அதில் வெற்றி அடைந்து இருக்கிறது.

ஒரு சில நாடுகளிடம் மட்டும் உள்ள அதிநவீன ஏவுகணை சோதனை - இந்தியா அசாத்திய வெற்றி!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Nov 2022 12:34 PM GMT

ராணுவத்துறையில் அதன் பலத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப தளவாடங்கள் மற்றும் நவீன கருவிகள் நீர்மூழ்கி கப்பல்கள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு விதமான ஏவுகணைகளையும் சரி பார்த்து, அவற்றை ராணுவத்தில் இணைப்பது குறித்தும் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக தற்பொழுது எதிரி நாடுகளின் பாலீஸ்க்கு ஏவுகணைகளை இடம் அறிந்து அளிக்கும் ஏடி-1 என்ற ஏவுகணை இந்தியா உருவாக்கி உள்ளது. அதன் முதலாவது சோதனை நேற்று ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில் நடத்தப்பட்டது. வெவ்வேறு இடங்களில் இலக்க வைக்கப்பட்டுள்ளன. அந்த இலக்குகளை ஏறி ஒன்று ஏவுகணை வெற்றி கரமாக தாக்கியது. இந்த ஏவுகணை மூலம் இந்திய ராணுவப்படையில் அதன் வலிமை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


அனைத்து சாதனங்களும் எதிர்பார்த்தது போல் சிறப்பாக இயங்கினர். இதையொட்டி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு ராணுவ மந்திரி ராஜநாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ஒரு ஏவுகணை உலகில் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News