Kathir News
Begin typing your search above and press return to search.

வெளிநாடுகளை மிஞ்சும் வகையில் இந்திய மெட்ரோ ரயில் சேவை: மத்திய அமைச்சர் பெருமிதம்!

வெளிநாடுகளை மிஞ்சும் வகையில் இந்தியாவின் மெட்ரோ ரயில் சேவை விரிவு படுத்தப்படும் என மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார்.

வெளிநாடுகளை மிஞ்சும் வகையில் இந்திய மெட்ரோ ரயில் சேவை: மத்திய அமைச்சர் பெருமிதம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Oct 2022 12:03 PM GMT

சென்னையில் நடைபெற்ற மெட்ரோ ரயில் தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்த்தீப் சிங் பூரி செய்தியாளர்களுக்கு பேட்டியின் போது கூறுகையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் கூட்டாட்சி முறைக்கு உதாரணமாக விளங்குகிறது. நாடு முழுவதும் தற்போது எண்ணூற்று பத்து கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.


இந்தியாவின் புரட்சி:

இது இந்தியாவிற்கு பெருமை அளிக்கும் வகையில் உள்ளது. ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு காண மெட்ரோ ரயில் பணிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நகர்ப்புற போக்குவரத்து முறையில் இது புரட்சிகரமானது. மெட்ரோ ரயில் போக்குவரத்தை பயன்படுத்தும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. மெட்ரோ ரயில் பயன்பாட்டில் ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளை இந்தியா நின்றுவிடும் வகையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் விரிவுபடுத்தப்படும்.


வெளிநாடுகளை விட அதிகமான தரமான சேவைகள்:

சென்னையின் மெட்ரோ ரயில் கொரோனாவிற்கு முன்பு பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை விட, தற்போது மூன்று மடங்கு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மக்களிடையே இது பற்றி பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே வெளிநாடுகளை விட அதிகமான தரமான சேவைகளை வழங்கும் நாடாக இந்தியா மாறும் என்று அவர் உறுதி எடுத்து இருக்கிறார்.

Input & Image courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News