நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
![நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினரின் ஜாமீன் மனு தள்ளுபடி! நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினரின் ஜாமீன் மனு தள்ளுபடி!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/c24592c11e2666c10d2331171108b38f.jpeg)
தங்க நகை வியாபாரம் தொடர்பான நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கமருதீன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. அவரது மனுவில், கமருதீன் தனது உடல்நலக்குறைவைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.
அவரது ஜாமீன் விண்ணப்பத்தை அரசாங்கம் எதிர்த்து மனு தாக்கல் செய்தது. பல கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட தங்க நகை வியாபாரத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றிய வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்று ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், சிறை அதிகாரிகள் தேவைப்பட்டால் குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கமருதீனுக்கு மருத்துவ உதவிகளை வழங்குமாறு உத்தரவிட்டது.
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் நவம்பர் 7 ம் தேதி அவர் இயக்குநராக இருந்த தங்க நகை வியாபாரத்தில் முதலீட்டாளர்களால் புகார் அளிக்கப்பட்டதாக 70 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, காமருதீனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.