Kathir News
Begin typing your search above and press return to search.

சுதந்திர தின விழாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி ! உளவுத்துறை எச்சரிக்கை !

சில நாட்களுக்கு முன்னர் அதிநவீன கண்ணி வெடிகளை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்குள் அனுப்பி இருப்பதை உளவுத்துறை கண்டுப்பிடித்துள்ளது.

சுதந்திர தின விழாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி ! உளவுத்துறை எச்சரிக்கை !

ThangaveluBy : Thangavelu

  |  13 Aug 2021 8:33 AM GMT

நாடு முழுவதும் வருகின்ற 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்னர் இந்தியாவில் மிகப்பெரிய கண்ணிவெடி தாக்குதலை நடத்துவதற்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு என்று பயங்கரவாதிகள் ஐ.எஸ்.ஐ., அதிகாரிகள் பயிற்சி அளித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் அதிநவீன கண்ணி வெடிகளை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்குள் அனுப்பி இருப்பதை உளவுத்துறை கண்டுப்பிடித்துள்ளது.

இதனை குறிப்பிட்ட இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு 6 நக்சலைட் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக முகமது சித்திக் என்ற பயங்கரவாதி தலைமையிலான குழுவினர் தற்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டுள்ளனர். எனவே முக்கியமான நகரங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: Malaimalar

https://www.maalaimalar.com/news/topnews/2021/08/13102420/2910568/Tamil-news-Intelligence-alert-militants-plot-to-land.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News