Kathir News
Begin typing your search above and press return to search.

சமூகத்தின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியமானது: மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

சமூகத்தின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியமானது: மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

ThangaveluBy : Thangavelu

  |  8 March 2022 10:59 AM GMT

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். சர்வசேத மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் பெண்கள் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள். பெண்கள் மேம்பாட்டில் அரசு மிகவும் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அது மட்டுமின்றி எண்ணற்ற திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. பெண்களுக்கான வாய்ப்புகளை உயர்த்த அரசு இயங்கி வருகிறது.

மேலும், ஒரு நாட்டோட வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. சமூகத்திற்கு தேவையான நிதியை சேர்ப்பது, வீட்டை பராமரிப்பது, கல்லவி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் அதிகமான கவனம் செலுத்துவதால் நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு மிகவும் அபரிமிதமானது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News