Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் ரயில் பாதைகளை தகர்க்க சதி திட்டம் போடும் ஐ.எஸ்.ஐ - உளவுத்துறை எச்சரிக்கை!

இந்தியாவில் ரயில் பாதைகளை தகர்க்க சதி திட்டம் போடும் ஐ.எஸ்.ஐ - உளவுத்துறை எச்சரிக்கை!

ThangaveluBy : Thangavelu

  |  24 May 2022 8:07 AM GMT

ரயில் பாதைகளைக் குறிவைத்து பாகிஸ்தானின் 'இன்டர் சர்வீசஸ் உளவுத்துறை' சதித் திட்டம் தீட்டியுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் அமைந்துள்ள ரயில் பாதைகளைக் குறிவைத்து பாகிஸ்தானின் 'இன்டர் சர்வீசஸ் உளவுத்துறை' சதித்திட்டம் தீட்டியுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய உளவுத்துறை அளித்துள்ள தகவலின்படி, பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் ரயில் தண்டவாளங்களை தகர்ப்பதற்காக ஐ.எஸ்.ஐ. பயங்கரவாத அமைப்பு திட்டம் போட்டுள்ளது.

குறிப்பாக சரக்கு ரயில்களைத் தாக்கும் நோக்கத்ததில் இந்த் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான தாக்குதலுக்கு இந்தியாவில் உள்ள சில தங்களின் செயற்பாட்டாளர்களுக்கு ஐ.எஸ்.ஐ. நிதி அளித்துள்ளது. எனவே இந்தியாவில் உள்ள பாகிஸ்தானின் ஸ்லிப்பர் செல்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட அதிகமான வாய்ப்பு உள்ளது. எனவே அனைத்து மாநில போலீசாரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News