ஐடெக் வசதியுடன் உருவாகிறது... புதிய பாராளுமன்றத்திற்கு அடிக்கல்.. பிரதமர் மோடி பங்கேற்பு.!
ஐடெக் வசதியுடன் உருவாகிறது... புதிய பாராளுமன்றத்திற்கு அடிக்கல்.. பிரதமர் மோடி பங்கேற்பு.!
![ஐடெக் வசதியுடன் உருவாகிறது... புதிய பாராளுமன்றத்திற்கு அடிக்கல்.. பிரதமர் மோடி பங்கேற்பு.! ஐடெக் வசதியுடன் உருவாகிறது... புதிய பாராளுமன்றத்திற்கு அடிக்கல்.. பிரதமர் மோடி பங்கேற்பு.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/575832316835f54aeb5a4356c222ab66.jpg)
டெல்லியில் தற்போதைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டி, பூமி பூஜையில் கலந்து கொண்டார்.
ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்களை பார்ப்போம்: தற்போதைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில், முக்கோண வடிவில் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய பாராளுமன்றம் அமைகிறது.
இந்திய நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்ட அரசியல் சட்ட அரங்கம், எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் பகுதி, நூலகம், நிலைக்குழுக்களின் அறைகள், சாப்பிடுவதற்கு தனியாக இடம், வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெறுகிறது. மக்களவையில் 888 இருக்கை வசதிகளும், மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளும் இருக்கும்.
பாராளுமன்ற கூட்டு கூட்டத்தின்போது, மக்களவையில் 1,224 பேரை அமர வைப்பதற்கான வசதிகள் இடம் பெற்றிருக்கும். இந்திய கலாச்சாரம், பிராந்திய கலைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் புதிய பாராளுமன்றம் அலங்கரிக்கப்படுகிறது.