Kathir News
Begin typing your search above and press return to search.

காலிஸ்தானிய அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஜக்தேவ் சிங் ஜக்கா கைது!

காலிஸ்தானிய அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஜக்தேவ் சிங் ஜக்கா கைது!

காலிஸ்தானிய அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஜக்தேவ் சிங் ஜக்கா கைது!

Saffron MomBy : Saffron Mom

  |  9 Feb 2021 1:49 PM GMT

பிப்ரவரி 8 இல் திங்கட்கிழமை அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் உத்தரப் பிரதேச காவல்துறை மற்றும் பஞ்சாப் காவல்துறை இணைந்து ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அந்த நடவடிக்கையில் காலிஸ்தானிய பயங்கரவாத அமைப்பில் தொடர்புடைய பயங்கரவாதியை லக்னோவில் வைத்து கைது செய்துள்ளனர்.


காவல்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, கைது செய்யப்பட்ட குற்றவாளி ஜஃதேவ் சிங் என்று கூறப்பட்டுள்ளது. இவர் பஞ்சாபில் பிரோஸ்ப்பூரில் வசித்து வருகிறார் மற்றும் காலிஸ்தானிய அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

லக்னோவில் ஜானகி புரம் பகுதியில் வைத்து உத்தரப் பிரதேச மற்றும் பஞ்சாப் காவல்துறை குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இவர் காலிஸ்தானிய பயங்கரவாத குழுவைச் சேர்ந்த பரம்ஜித் சிங் பம்மா, மல்டனி சிங் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பஞ்சாப் காவல்துறை குற்றம் சாட்டப்பட்டு கைது செய்துள்ள பயங்கரவாதியைப் போக்குவரத்துக்கு ரிமாண்ட் பெற்றவுடன் அவர்களுடன் அழைத்துச் செல்வர் என்று கூறப்பட்டுள்ளது.


முன்னர் கடந்த ஆண்டு மே மாதத்தில் காலிஸ்தானிய பயங்கரவாதியான தீரத் சிங்கை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்தது. அப்போது கைது செய்யப்பட்ட நடவடிக்கையிலும் மீரட் பகுதியில் வைத்து பஞ்சாப் காவல்துறையுடன் இணைத்து கைது செய்தனர். மேலும் சட்டவிரோத நடவடிக்கை குற்றச்சாட்டின் கீழ் தீரத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News