Kathir News
Begin typing your search above and press return to search.

ஜம்மு & காஷ்மீர்: இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர்.!

ஜம்மு & காஷ்மீர்: இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர்.!

ஜம்மு & காஷ்மீர்: இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர்.!

Saffron MomBy : Saffron Mom

  |  14 Dec 2020 1:17 PM GMT

யூனியன் பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் பகுதியில் ஒரு முன்னேற்ற வளர்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினர் பூஞ்ச் மாவட்டத்தில் ஊடுருவிய பாகிஸ்தானியத் தீவிரவாதிகள் இரண்டு பேரை போஷானா பகுதியில் வைத்துச் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்த இரண்டு தீவிரவாதிகள் இருவரும் எல்லைக்கோடு கட்டுப்பாட்டு வழியாக ஊடுருவி வந்ததாக காவல்துறை பகிர்ந்து கொண்டனர். போஷானாவில் வைத்து சட்டப்பணி பகுதியில் வைத்து இந்த இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டுக்கொள்ளும் வேளையில் அவர்களது கூட்டாளிகளையும் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

யூனியன் பிரதேச காவல்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த தீவிரவாதிகள் தற்போது நடந்து வரும் DDC தேர்தலைச் சீர்குலையும் வகையில், ஷோப்பிங் மாவட்டத்துக்குச் சென்று ஒரு பெரிய பயங்கரவாத திட்டத்தை நிறுவ இருந்தாக தெரிவித்துள்ளனர். இதே தகவலை உளவுத்துறையிடம் இருந்து பெற்ற பிறகு, நிலைமையைச் சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் டிசம்பர் 11 (வெள்ளிக்கிழமை) அன்றே அந்த பகுதிக்குச் சென்று விட்டனர், ஆனால் பனிப் பொழிவு அதிகமிருந்தாலும் மற்றும் வானிலை சரியில்லாததால் நடவடிக்கையை மேற்கொள்ள வில்லை. அதனை விளைவாக ஞாயிற்றுக்கிழமை அன்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்த நடவடிக்கையானது, லஷ்கர்-இ-தைபா(LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது(JeM) முதலியோர் 2001 இல் பாராளுமன்றத்தில் நடத்திய பயங்கரவாத தாக்குதலின் 19 ஆண்டு இந்தியா அனுசரித்த நாளின் நடைபெற்றுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News