Kathir News
Begin typing your search above and press return to search.

ஜம்முவின் நடந்த அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: குடியரசு தினத்திற்கு 4 நாட்கள் உள்ள நிலையில் அரங்கேறிய சம்பவம்?

ஜம்முவில் வெடித்த குண்டுகளின் மாதிரிகள் தற்பொழுது சேமிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

ஜம்முவின் நடந்த அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: குடியரசு தினத்திற்கு 4 நாட்கள் உள்ள நிலையில் அரங்கேறிய சம்பவம்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Jan 2023 2:35 AM GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த அதனுடைய நடவடிக்கைகள் தற்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தற்போது அங்கு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அப்போது பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக பண்டித்துகள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்து வரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை குறி வைத்து இந்த ஒரு தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.


அந்த வகையில் இன்று காலை அங்குள்ள பகுதியில் அடுத்தடுத்த இரண்டு இடங்களில் சக்தி வாய்ந்த அணுகுண்டு வெடித்தது. இதில் ஆறு பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்ற அவர்களின் வீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள். இதன் காரணமாக அந்த ஒரு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்தடுத்த நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக இந்த நாச வேலையில் ஈடுபட்டிருந்த தீவிரவாத கும்பல் யார் என்பது? குறித்து தற்பொழுது பாதுகாப்பு படை விசாரணை நடத்தி வருகிறார்கள்.


ஆனால் இதற்கு எந்த ஒரு அமைப்பும் தற்போது வரை பொறுப்பேற்கவில்லை. குடியரசு தின விழாவிற்கு இந்தியாவில் இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் அடுத்தடுத்த இந்த இரட்டைக் குண்டு சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் பரபரப்பு இருக்கிறது. மேலும் தற்போது கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News