Kathir News
Begin typing your search above and press return to search.

ஜம்மு & காஷ்மீர்: லஸ்கர்-இ-தைபாவின் இரண்டு தீவிரவாதிகள் கைது - வெடிபொருட்கள் பறிமுதல்!

ஜம்மு & காஷ்மீர்: லஸ்கர்-இ-தைபாவின் இரண்டு தீவிரவாதிகள் கைது - வெடிபொருட்கள் பறிமுதல்!

ஜம்மு & காஷ்மீர்: லஸ்கர்-இ-தைபாவின் இரண்டு தீவிரவாதிகள் கைது - வெடிபொருட்கள் பறிமுதல்!

Saffron MomBy : Saffron Mom

  |  3 Jan 2021 6:38 PM GMT

ஜம்மு&காஷ்மீரில் குலாம் பகுதியில் லஸ்கர்-இ-தைபா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி மற்றும் 34 நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையானது தெற்கு காஷ்மீரில் குல்கம் மாவட்டத்தில் ஹட்டிபுர பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது நடைபெற்றதாக இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கிருந்து குற்றச்சாட்டுக்குரிய ஆவணங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மற்றும் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குல்கம் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சீனத் துப்பாக்கிகள், சீன குண்டுகள், இரண்டு AK துப்பாக்கிகளின் தோட்டாக்கள் மற்றும் ஜெர்மன் காம்பஸ் முதலியவையும் கைப்பற்றப் பட்டுள்ளதாக இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளிக்கிழமை அன்று லஸ்கர்-இ-தைபா அமைப்புக்கு பணிபுரியும் மூன்றில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாக ஜம்மு&காஷ்மீர் காவல்துறை தெரிவித்தது. மேலும் டிசம்பர் மாதத்தில் இரண்டு லஸ்கர்-இ-தைபா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்கவுண்டரின் போது சரணடைந்தனர். மேலும் காவல்துறை இரண்டு துப்பாக்கி உட்பட வெடிபொருட்களையும் பறிமுதல் செய்தது. மேலும் 2020 இல் 12 தீவிரவாதிகள் என்கவுண்டரின் போது சரணடைந்துள்ளனர் என்று காஷ்மீர் IGP விஜய் குமார் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News